இரவில் 365 போர்வை போர்த்துபவர்
ADDED :2889 days ago
கார்த்திகை மாத கைசிக ஏகாதசியன்று (வளர்பிறை ஏகாதசி) இரவில், உற்சவர் நம்பெருமாளுக்கு, 365 போர்வைகளை ஒவ்வொன்றாக போர்த்தும் வைபவம் விடிய விடிய நடக்கிறது. சுவாமிக்கு தினசரி பூஜையில் அணிவிக்கும் வஸ்திரங்களில் குறைபாடு இருந்தால், அதை நிவர்த்தி செய்யும்விதமாக இந்த பரிகாரம் செய்கின்றனர். கார்த்திகை, மார்கழி குளிர் மாதங்கள் என்பதால், சுவாமியின் மீதான அன்பின் காரணமாகவும், போர்வை அணிவிப்பதாக சொல்வர்.