உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பறவைக்காவடி ஊர்வலம்: இலங்கை தமிழர்கள் நேர்த்திக்கடன்

பறவைக்காவடி ஊர்வலம்: இலங்கை தமிழர்கள் நேர்த்திக்கடன்

பவானிசாகர்: பவானிசாகர் இலங்கை தமிழர் முகாமில், 3,500 க்கும் மேற்பட்டோர் வசிக்கின்றனர். 1991ல், இங்கு வந்த மக்கள், 1994 முதல் முருக பக்தர்கள் ஒன்றிணைந்து அலகு குத்தி, பறவைக்காவடி ஊர்வலம் நடத்தி வருகின்றனர். அதன்படி, 23ம் ஆண்டு பறவைக்காவடி ஊர்வலம், நேற்று மாலை துவங்கியது. டணாய்க்கன் கோட்டை கோவிலில், சிறப்புபூஜைகள் செய்து, பக்தர்கள் அலகு குத்தி நேர்த்திக்கடன் செலுத்தினர். பின்னர் அலங்கரிக்கப்பட்ட முருகன், தேர்பவனியுடன் பக்தர்கள் பறவைக்காவடியில் தொங்கியபடி ஊர்வலமாக சென்றனர். டணாய்க்கன் கோட்டை கோவிலில் புறப்பட்ட ஊர்வலம் பஸ் ஸ்டாண்ட், மார்க்கெட் சதுக்கம், சிவில் குடியிருப்பு வழியாக இலங்கை தமிழர் முகாம், நாகம்மாள் கோவிலை சென்றடைந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !