பாட்டு! பொன்னான பாட்டு!!
ADDED :2843 days ago
மார்க்கண்டேயருக்காக சிவன் மழு (கோடரி) என்ற ஆயுதம் ஏந்தி நடனமாடிய தலம் அரியலூர் மாவட்டத்திலுள்ள மழுவாடி. தற்போது ‘மழபாடி’ என்று மாறி விட்டது. ஒருமுறை சுந்தரரின் கனவில் தோன்றிய சிவன், “மழுவாடிக்கு வர மறந்தனையோ?,” என்று நினைவுபடுத்தினார். உடனே, இத்தலத்திற்கு வந்த சுந்தரர், ‘பொன்னார் மேனியனே’ என்ற புகழ் மிக்க பதிகம் பாடினார். ‘என் தாயானவனே! திருமழபாடியில் வசிக்கும் மாணிக்கமே! உன்னை விட்டால் வேறு யாரை நான் நினைப்பேன்”என்ற பொருளில் ‘மழபாடியுள் மாணிக்கமே! அன்னே! உன்னை அல்லால் இனி யாரை நினைக்கேனே!” என்று சுந்தரர் உள்ளம் உருகி பாடினார்.