பாதுகாப்பான பயணத்திற்கு....
ADDED :2843 days ago
நால்வழிச்சாலையில் குறித்த இடத்திற்கு சுலபமாகவும், விரைவாகவும் செல்வது போல, பிறவிப்பயணத்தை எளிதில் கடக்க சம்பந்தர், நாவுக்கரசர், சுந்தரர், மாணிக்கவாசகர் நால்வரும் வழிகாட்டியுள்ளனர். இவர்கள் பாடிய தேவாரம், திருவாசகம்பாடுவதாலும், ஐந்தெழுத்து மந்திரமான ‘நமசிவாய’ ‘சிவாயநம’ என்பதை சொல்வதாலும் வாழ்க்கைப் பயணம் பாதுகாப்பாக அமையும். அவ்வையார், ‘சிவாயநம என்று சிந்தித்திருப்போருக்கு அபாயம் ஒரு நாளும்இல்லை” என கூறி உள்ளார்.