20 ஆண்டுக்கு பிறகு நாமகிரிப்பேட்டையில் நாளை தீமிதி விழா
ADDED :2798 days ago
நாமகிரிப்பேட்டை: நாமகிரிப்பேட்டையில், தென்னிந்திய வீரஜங்கம சங்கத்திற்கு பாத்தியப்பட்ட வீரபத்திர சுவாமிகோவில் உள்ளது. ஆண்டுதோறும், சிவராத்திரியில், சிறப்பு பூஜை, தீ மிதிவிழா நடப்பது வழக்கம். புனரமைப்பு பணிகள் நடந்து வந்ததால், 20 ஆண்டுகளுக்கு மேலாக, தீ மிதிவிழா நடக்கவில்லை. கடந்த சில மாதங்களுக்கு முன், கோவில் கும்பாபி ?ஷகம் நடந்தது. சிவராத்திரியில் தீமிதி விழா நடத்த ஏற்பாடுகளை செய்து வந்தனர். இன்று இரவு முழுவதும் சிறப்பு பூஜை, அபி ?ஷக ஆராதனை நடைபெறும். நாளை காலை, 6:00 மணிக்கு தீ மிதிவிழா நடக்கிறது.