நடராஜர் எங்கே நடனம் கற்றார்?
ADDED :2871 days ago
நடராஜர், ஆடல்வல்லான் என்று போற்றப்படுகிறார். கடவுளாக இருந்தாலும் நடனத்தை முறையாகப் பயின்ற பின்னரே அம்பலத்தில் ஆடினார். இதனை நடனம் பயில்பவர்கள் ஆரம்பத்தில் ஒரு அறையில் தனிமையில் பயிற்சி எடுப்பர். பின்னர் அம்பலத்தில் (மேடையில்) அரங்கேற்றம் செய்வர். இதே நியதியை சிவனும் பின்பற்றி செப்பறையில் (திருநெல்வேலி அருகில்) நடனப்பயிற்சி மேற்கொண்டார். பின் சிதம்பரத்தில் அரங்கேற்றம் செய்தார்.