தவிடு தூவி வழிபாடு
ADDED :2871 days ago
கேரள மாநிலம் கொடுங்கல்லூர் பகவதியம்மன் கோயிலில் உள்ள ஒரு அரச மரத்தின் கீழ் தவிட்டு முதியம்மன் என்ற பெயரில் அம்பிகை அருள்பாலிக்கிறாள். இவள் மீது அரிசியுடன் தவிடு கலந்து தூவி வழிபடும் பழக்கம் உள்ளது. இவ்வாறு வழிபடுவதால் கால்நடைகள் நோய்கள் நீங்கி வாழும் என்றும், அதிக பால் சுரக்கும் என்றும் நம்புகின்றனர்.