உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / எந்த வேலையும் நல்ல வேலைதான்

எந்த வேலையும் நல்ல வேலைதான்

* கீழான வேலை என எதுவுமில்லை. எப்படி செய்வது என தெரிந்து கொண்டால் எல்லாம் நல்ல வேலை தான்!  
* நீ எப்படி இருந்தாய் என்பதைப் பற்றி கவலைப்படுவதால் ஏதும் ஆகப் போவதில்லை. எப்படி இருக்க வேண்டும் என்பதை மட்டும் நினை.
* கடவுளின் அழைப்பிற்காக காத்திருங்கள். அப்போது தான் அவரது அருளைப் பெற முடியும்.
* பயந்தவன் கடவுளிடம் கோபத்தை காண்கிறான். நம்பிக்கை உள்ளவன் அவரிடம் புன்னகையையும், அன்பையும் காண்கிறான்.
* நீங்கள் கேட்டதையெல்லாம் கடவுள் தரமாட்டார். உங்கள் தகுதிப்படியே தான் அவர் அருள்வார். கடவுளின் அருளுக்கு உங்களை பாத்திரமாக்கி கொள்ளுங்கள்.
* மனம் என்பது பாலீஷ் செய்யப்பட்ட கண்ணாடி. அதை தூய்மையாக வைத்துக் கொள்வது நமது கடமை.
* ஒரு நோயாளிக்கு மருந்தை விட முக்கியமானது தன்னம்பிக்கை.
* உன் திறமை எல்லாம் உன்னுடையதே என்று நம்பினால், கடவுளின் ஆதரவு
இல்லாமல் போனாலும் அதை இழந்ததாக உணர மாட்டாய்.
* வேலை செய்வது பிரார்த்தனையாக இருக்கட்டும். ஏன் என்றால் வேலை ஒன்றே, கடவுளுக்கு செலுத்தும் மிகச் சிறந்த காணிக்கை.
* வாழ்வில் எந்த நிலையிலும் நேர்மை தவறாதீர்கள். நேர்மையான மனம் உடையவர்களுக்கு, மகிழ்ச்சி என்னும்  பரிசை கடவுள் தருவார்.
* பிறரது விஷயத்தில்  புதிய மாறுதல் உண்டாக்க விரும்பினால், அந்த மாற்றம் உங்களிடம் இருந்தே ஆரம்பிக்கட்டும். எடுத்துச் சொல்வதை விட எடுத்துக்காட்டாக இருங்கள்.       
* ஒழுக்கம் என்பது வளர்ச்சிக்கான ஒரு வழிமுறை. அதை உயிராக மதிப்பது நம் கடமை.   * உண்மை, நேர்மை ஆகிய இரு பண்புகளும் மனத்தூய்மைக்கு அவசியம். மனத் தூய்மையின்றி கடவுளை வழிபட்டு பயனில்லை.       
* அமைதியுடன் இருக்க பழகி விட்டால், பெரும்பாலான பிரச்னைகளை வாழ்வில் தவிர்த்து விடலாம். எப்போதும் அமைதி காத்து மன வலிமையுடன் இருக்க பழகுங்கள்.    
* நாம் பெற்ற அறிவு, கடவுளிடம் இருந்தே வந்தது. கடவுளின் படைப்புகளில் இருந்து மனித குலம் எல்லா அறிவையும் பெற்று கொண்டது.

- சொல்கிறார் புதுச்சேரி  அன்னை அறிவுரை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !