பிள்ளையாருக்கு ரசம், துவையல்
ADDED :2825 days ago
பிள்ளையாருக்கு மோதகம் தான் இஷ்டம். ஆனால், கும்பகோணம் நாகேஸ்வரசுவாமி கோயிலில் உள்ள ஜூரஹர விநாயகருக்கு சாதம், ரசம், பருப்புத் துவையல் ஆகியவற்றை நிவேதனம் செய்கின்றனர். இவருக்கு “ஜூரஹர விநாயகர்” என்று பெயர். இருதய நோய், ஆஸ்துமா, அடிக்கடி காய்ச்சல், ஜலதோஷம் கொண்டவர்கள் இவற்றை நிவேதனம் செய்து இவரிடம் நிவாரணம் வேண்டுகின்றனர்.