மாகாளியம்மன் குண்டம் விழா:பூவோடு எடுத்து பக்தர்கள் பரவசம்
கோட்டூர்: கோட்டூர், பழனியூர் மாகாளியம்மன் கோவில் திருவிழாவில், பக்தர்கள் இன்று பூக்குண்டம் இறங்குகின்றனர்.கோட்டூர், பழனியூர் மாகாளியம்மன் கோவில் குண்டம் திருவிழா கடந்த, 2ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. தினமும், சிங்கம், புலி, குதிரை உள்ளிட்ட வாகனங்களில் அம்மன் திருவீதியுலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். நேற்று முன்தினம் கோவிலில் அம்மனுக்கு அபிஷேகம் நடந்தது. மாலை, 6:00 மணிக்கு பக்தர்கள் பூவோடு எடுத்து வேண்டுதலை நிறைவேற்றினர். நேற்று இரவு, 10:00 மணிக்கு குண்டம் பூ வளர்த்தல் நடந்தது. இன்று, 9ம் தேதி காலை, 6:00 மணிக்கு பக்தர்கள் பூக்குண்டம் இறங்கி அம்மனுக்கு நேர்த்திக்கடன் செலுத்துகின்றனர். காலை, 8:00 மணிக்கு தேர்வடம் பிடித்தல், காலை 9:00 மணிக்கு அன்னதானம், மாலை, 4:00 மணிக்கு தேர் திருவீதி உலா நடக்கிறது. நாளை இரவு, 9:00 மணிக்கு வானவேடிக்கை; 11ம் தேதி காலை, 7:00 மணிக்கு மஹா அபிஷேக, ஆராதனை நடக்கிறது.