பரமக்குடியில் பங்குனித் திருவிழா: மார்ச் 16ல் பூச்சொரிதல்
பரமக்குடி: பரமக்குடி முத்தால பரமேஸ்வரி அம்மன் கோயிலில் பங்குனித் திருவிழா மார்ச் 23ல் கொடியேற்றத்துடன் துவங்கவுள்ளது. முன்னதாக பூச்சொரிதல்விழா மார்ச்16ல் இரவு நடக்கும். பரமக்குடி முத்தாலம்மன் கோயில் பங்குனி தேரோட்டம், பால்குட விழாசிறப்பு வாய்ந்தது.விழாவின் முன்னோட்டமாக மார்ச் 16 அன்றுஇரவு நகர் முழுவதும் பல்வேறு இடங்களில் பூத்தட்டு ஊர்வலம், கலைநிகழ்ச்சி நடக்கும்.தொடர்ந்து மார்ச் 22ல் இரவு காப்புக்கட்டுதல், மறுநாள் காலை கொடியேற்றத்துடன்விழா துவங்கும்.முதல் நாள் இரவு அம்மன் பூதகி வாகனத்திலும்,பின்னர் தினமும்வெள்ளி சிங்க, அன்ன, ரிஷப,யானை, கிளி, காமதேனு, குதிரை வாகனங்களில்வீதியுலா வருவார்.
முக்கிய நிகழ்வாக மார்ச் 31ல் இரவு மின்சார தீப தேரோட்டமானது, இந்த ஆண்டு புதிய தேரில் இரவு 8:10 மணிக்கு அம்மன் நான்கு மாட வீதிகளில் நடக்கிறது.அன்றுஇரவு அம்மன் கள்ளர் அலங்காரத்துடன் பூப்பல்லக்கில் வைகையில் வலம் வருவார்.மறுநாள் கொடியிறக்கமும், ஏப். 2ல் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்கும்பால்குட ஊர்வலம், பாலபிேஷகம் நடக்கவுள்ளது. ஏற்பாடுகளை தலைவர் பாலுச்சாமி தலைமையில் ஆயிர வைசியசபை நிர்வாகிகள் மற்றும் தேவஸ்தான டிரஸ்டிகள் செய்து வருகின்றனர்.