பங்குனி பிரம்மோற்சவம்: பூதவாகனத்தில் திருவள்ளுர் தீர்த்தீஸ்வரர் உலா
ADDED :2767 days ago
திருவள்ளூர்: திருவள்ளூர், தீர்த்தீஸ்வரர் கோவிலில், பங்குனி பிரம்மோற்சவ விழா, மார்.,13ல் கொடியேற்றத்துடன் துவங்கி நடைபெற்றுவருகிறது. விழாவில் தினமும், காலை, மாலை இரு வேளையிலும் பல்வேறு வாகனங்களில் உற்சவர் வீதி வலம் வருவார். விழாவை முன்னிட்டு, இன்று(மார்.,15) பூதவாகனத்தில் தீர்த்தீஸ்வரர் உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். ஏராளமான பகத்ர்கள் தரிசனம் செய்தனர். 17ம் தேதி, மாலை, 6:00 மணிக்கு தேவார இன்னிசை கச்சேரியும், 20ம் தேதி காலை, திருமுறை திருவிழாவும் நடைபெறுகிறது.