சாய்பாபா கோவில்களில் சிறப்பு பூஜை
ADDED :2768 days ago
திருத்தணி : திருத்தணி ஒன்றியம், கே.ஜி. கண்டிகை மற்றும் தலையாறிதாங்கல் ஆகிய பகுதிகளில் உள்ள ஷீரடி சாய்பாபா கோவில்களில், நேற்று, வியாழக்கிழமையையொட்டி, மூலவருக்கு பாலாபிஷேக உற்சவ விழா நடந்தது.விழாவையொட்டி, அதிகாலை, 5:00 மணிக்கு, சுப்ரபாதம், காலை, 5:30 மணிக்கு காகட ஆரத்தி நடந்தது. தொடர்ந்து, மூலவருக்கு பாலாபிஷேகம் நடந்தது. இதில், திரளான பக்தர்கள் சாய்பாபாவிற்கு பால் அபிஷேகம் செய்தனர். பகல், 12:00 மணிக்கு, மூலவருக்கு சிறப்பு மலர் அலங்காரம் மற்றும் தீபாராதனை நடந்தது. மாலையில், சந்திய ஆரத்தி மற்றும் சேஜ் ஆரத்தி நடந்தது.இதில், திருத்தணி மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில் இருந்து, திரளான பக்தர்கள் வழிப்பட்டனர்.