மனிதனும் தெய்வமாகலாம் என்பதன் பொருள் என்ன?
ADDED :2907 days ago
மனதின் செயல்பாட்டால் நம் வாழ்வு அமைகிறது. மிருகமாக தாழ்த்துவதும், தெய்வமாக உயர்த்துவதும் அவரவர் மனமே. பேராசை, கோபம், பொறாமை போன்ற தீய செயல்களில் ஈடுபடுபவர்கள் மிருகங்களாக கருதப்படுகின்றனர். அன்பு வழியில் மனைவி, மக்களுடன் வாழ்பவர்களையும் பிறர் நலனுக்காக வாழ்பவர்களையும் உலகம் தெய்வமாக போற்றுகிறது. மனதை செம்மைப்படுத்தினால் தெய்வமாக உயர்வான் மனிதன்.