ஆங்கில புத்தாண்டை முன்னிட்டு தமிழக கோயில்களில் சிறப்பு வழிபாடு
ADDED :5066 days ago
ஆங்கில புத்தாண்டான நேற்று அதிகாலை தமிழகத்தில் உள்ள அனைத்து கோயில்களிலும் சிறப்பு வழிபாடு நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று சுவாமியை வழிபட்டனர். உலகம் முழுவதும் ஆங்கில புத்தாண்டான 2012ம் ஆண்டை பட்டாசு வெடித்தும், கேக் வெட்டியும் உற்சாகமாக கொண்டாடினர். சர்ச்களில் நேற்று முன்தினம் நள்ளிரவில் சிறப்பு பிரார்த்தனை நடந்தது. புத்தாண்டை முன்னிட்டு நேற்று அதிகாலை நடை திறக்கப்பட்டு அனைத்து ஆலயங்களிலும் சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமியை வழிபட்டனர்.