நன்மை தரும் பாட்டு
ADDED :2868 days ago
கம்பராமாயணத்திலுள்ள
“நன்மையும் செல்வமும் நாளும் நல்குமே
தின்மையும் பாவமும் சிதைந்து தேயுமே
சென்மமும் மரணமும் இன்றித் தீருமே
இம்மையே இராமவென் றிரண்டெழுத்தினால்”
என்ற பாடலை ஸ்ரீராமநவமியன்று பாட வேண்டும். ராமனின் பெயரை சொன்னால் நன்மையும், செல்வ வளமும் உண்டாகும். தீமையும், பாவமும் அழிந்து போகும். பிறவி, மரணம் இரண்டும் நீங்கி பிறவி சுழலில் இருந்து விடுபடலாம் என்பது இந்தப் பாடலின் பொருள்.