நடயேட்டி மாரியம்மன் கோவிலில் நாளை பொங்கல்
ADDED :3049 days ago
ஈரோடு: ஈரோடு, கீழ் திண்டல், பெரியார் காலனியில் உள்ள, நடயேட்டி மாரியம்மன் கோவில் பொங்கல் விழா, பூச்சாட்டுதலுடன் தொடங்கி நடந்து வருகிறது. நாள்தோறும் சிறப்பு அபி?ஷகம், பூஜை நடக்கிறது. நேற்று முன்தினம், அம்மனுக்கு சந்தனகாப்பு அலங்காரம், நேற்றிரவு, பாலாபிஷேகம் நடந்தது. இன்று மதியம், காவிரி ஆற்றுக்கு சென்று தீர்த்தம் குடம் எடுத்து வருதல், நாளை பொங்கல் வைபவம், அலகு குத்துதல், மாவிளக்கு பூஜை நடக்கிறது. 5ல் மஞ்சள் நீராட்டுடன் விழா நிறைவடைகிறது.