வனதிருப்பதியில் ஊஞ்சல் சேவை!
உடன்குடி:வனத்திருப்பதி கோயிலில் ஆங்கில புத்தாண்டை முன்னிட்டு சிறப்பு பூஜை மற்றும் சுவாமி ஊஞ்சல் சேவை நடந்தது.புன்னைநகர் வனத்திருப்பதி ஸ்ரீநிவாசபெருமாள் கோயில், ஆதிநாராயணன், சிவனணைந்த பெருமாள் கோயில் அப்பகுதியில் மிகவும் பிரசித்திப் பெற்றது. இக்கோயிலில் ஆங்கில புத்தாண்டையொட்டி அதிகாலை நடைதிறக்கப்பட்டு கோ பூஜையும், தொடர்ந்து மூலவர், உற்வருக்கு திருமஞ்சனமும் (அபிசேகமும்) சிறப்பு அலங்கார பூஜையும் நடந்தது. மதியம் சிறப்பு சிங்காரி செண்டை மேளம் நிகழ்ச்சியும், மாலை ஸ்ரீநிவாச பெருமாள் ஊஞ்சல் சேவையும், இரவு உட்பிரகாரத்தில் சுவாமி ஊர்வலமும் நடந்தது. பக்தர்கள் அனைவருக்கும் ஓட்டல் சரவணபவன் சார்பில் பிரசாதமும் வழங்கினர். இதில் சுமார் 25 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டனர். ஏற்பாடுகளை கோயில் நிறுவனர் ராஜகோபால், ஓட்டல் முதன்மை நிர்வாகி கணபதி, கோயில் நிர்வாகி வசந்தன் மற்றும் ஊழியர்கள் ஆகியோர் செய்திருந்தனர்.