ஆருத்ரா தரிசனம்: உத்திரகோசமங்கையில்யில் கோலாகலம்
ADDED :5149 days ago
ராமநாதபுரம் : ராமநாதபுரம் மாவட்டம் உத்திரகோசமங்கையில் உள்ள மங்களநாதசுவாமி கோயிலில் மரகத நடராஜருக்கு, காலை 10.45 மணியளவில் சந்தனம் கலையப்பட்டது. பின்னர், அச்சந்தனத்தைக் கொண்டு அபிஷேகங்கள் நடைபெற உள்ளன. ஆண்டு முழுவதும், நடராஜர் சிலை சந்தனக்காப்புடனேயே இருக்கும். ஆருத்ரா தரிசன நாளில், மட்டும் சந்தனம் கலையப்படும், அதன்படி, இன்று நடராஜர் சிலை சந்தனம் கலையப்பட்டது.இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.