சுவாமிமலை முருகன் கோவிலில் புத்தாண்டு திருப்படி திருவிழா
ADDED :2766 days ago
தஞ்சாவூர்: சுவாமிமலை முருகன் கோவிலில், தமிழ் புத்தாண்டு தினத்தை முன்னிட்டு, நேற்று திருப்படி திருவிழா நடைபெற்றது. முருகனின் ஆறுபடை வீடுகளுள் நான்காவது படைவீடாக, சுவாமிமலை சுவாமிநாத சுவாமி கோவில் திகழ்கிறது. மூர்த்தி, தலம், தீர்த்தம் ஆகியவற்றால் சிறப்புடைய இக்கோவில், குரு உபதேச தலம் எனச் சிறப்பு பெற்றது. இக்கோவிலில், தேவதைகள், 60 படிகளாக அமர்ந்து சுவாமிநாத சுவாமிக்கு சேவை செய்து வருவதாக நம்பிக்கை. தமிழ் புத்தாண்டு மற்றும் ஆங்கில புத்தாண்டு தினத்தில், 60 படிகளுக்கும் திருப்படி பூஜை நடைபெறும்.தமிழ் புத்தாண்டு தினமான நேற்று, கோவிலில் அமைந்துள்ள, 60 திருப்படிகளுக்கும் விளக்குகள் ஏற்றி, சிறப்பு பூஜைகள் செய்து வழிபாடு நடைபெற்றது.