உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சமயபுரம் மாரியம்மன் கோவிலில் ஊஞ்சல் உற்சவம் கோலாகலம்

சமயபுரம் மாரியம்மன் கோவிலில் ஊஞ்சல் உற்சவம் கோலாகலம்

பெத்தநாயக்கன்பாளையம்: ஏத்தாப்பூர், வசிஷ்ட நதிக்கரையிலுள்ள சமயபுரம் மாரியம்மன் கோவிலில், சித்திரை திருவிழாவையொட்டி, ஊஞ்சல் உற்சவம், நேற்று நடந்தது. காலை 10:30 மணிக்கு, குடும்பம் செழிக்க, மாங்கல்யம் நிலைக்க வேண்டி, 100க்கும் மேற்பட்ட பெண்கள், அம்மனுக்கு, குங்கும அர்ச்சனை செய்து வழிபட்டனர். தொடர்ந்து, உற்சவர் மாரியம்மனுக்கு, சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு, ஊஞ்சல் உற்சவம் கோலாகலமாக நடந்தது. இதில், திரளான பக்தர்கள், சுவாமியை தரிசித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !