ஸ்ரீபெரும்புதுாரில் ஆதிகேசவப் பெருமாள் பிரம்மோற்ச விழா துவக்கம்
ADDED :2834 days ago
ஸ்ரீபெரும்புதுார்: ஸ்ரீபெரும்புதுாரில் ஸ்ரீஆதிகேசவப் பெருமாள் மற்றும் ஸ்ரீபாஷ்யகார சுவாமி கோவில் உள்ளது. ராமானுஜரின் 1001ம் ஆண்டு அவதார விழா கடந்த 12ம் துவங்கி 21 ம் தேதி நிறைவடைந்தது. இதை தொடர்ந்து ஆதிகேசவப்பெருமாள் பிரம்மோற்ச விழா நேற்று (ஞாயிறு) காலைகொடியேற்றத்துடன் துவங்கியது. மாலை சிம்ம வாகனத்தில் சுவாமி திருவீதி உலா சென்று பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இதில் ஏராளமனோர் கலந்து கொண்டு வழிபட்டனர்.