சாப்டூர் ஆற்றில் இறங்கிய அழகர்
ADDED :3028 days ago
பேரையூர், பேரையூர் அருகே பழையூர் அழகர்சாமி கோயிலில் சித்திரை திருவிழாவை முன்னிட்டு அழகருக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது. சுவாமிக்கு நெல் மணி மாலை அணிவித்த பக்தர்கள் சப்பரத்தில் தலை சுமையாக சாப்டூர் கொண்டு சென்றனர். பச்சை பட்டு உடுத்திசாப்டூர் ஆற்றில் அழகர் எழுந்தருளி அருள் பாலித்தார். ஏராளமான பக்தர்கள் வழிபட்டனர்.