திருவள்ளூர் பஞ்சமுக ஆஞ்சநேயருக்கு இன்று(மே 4)ல் மூல மந்திர ஹோமம்
ADDED :2717 days ago
திருவள்ளூர்:திருவள்ளூர், விஸ்வரூப பஞ்சமுக ஆஞ்சநேயர் கோவிலில், நாளை (மே 5)ல், மூல மந்திர ஹோமம் நடைபெறுகிறது.
திருவள்ளூர், பெரியகுப்பம், தேவி மீனாட்சி நகரில், 32 அடி உயர ஆஞ்சநேயர் சிலை ஸ்தாபிக் கப்பட்டு, விஸ்வரூப பஞ்சமுக ஆஞ்சநேயர் கோவில் உள்ளது. ஒவ்வொரு மாதமும், மூல நட்சத்திரத்தன்று, இக்கோவில் வளாகத்தில், மூல மந்திர ஹோமம் நடத்தப்படுகிறது.
இன்று (மே 4)ல், மூல நட்சத்திரத்தை முன்னிட்டு, காலை, 9:00 மணிக்கு, மூல மந்திர ஹோமம் துவங்குகிறது. காலை, 11:30 மணிக்கு, மகா தீபாராதனை நடைபெறுகிறது.