மாரியமமன் கோவிலில் பால் குடம் எடுத்து பக்தர்கள் நேர்த்திக்கடன்
ADDED :2814 days ago
குளித்தலை: மாரியமமன் கோவில் திருவிழாவில், பக்தர்கள் பால்குடம், அலகு குத்தி நேர்த்திக்கடன் செலுத்தினர். குளித்தலை, முத்துபால சமுத்திரம் மாரியம்மன் கோவில் விழாவை முன்னிட்டு, வைகைநல்லூர் அக்ரஹாரம், கடம்பர் கோவில் பகுதி மக்கள், காவிரி ஆற்றில் இருந்து தீர்த்தக்குடம், பால் குடம், எடுத்து வந்தனர். சில பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்துவதற்காக, அலகு குத்தி, மேளதாளத்துடன் முக்கிய தெருக்கள் வழியாக வந்து, மாரியம்மன் கோவிலை வந்தடைந்தனர். அம்மனுக்கு சிறப்பு அபி ?ஷகம், ஆராதனை நடந்தது.