வேணுகோபால சாமி கோயிலில் விழா
ADDED :2853 days ago
நத்தம்: திண்டுக்கல் மாவட்டம் நத்தம் கோவில்பட்டியில் உள்ள பாமாருக்மணி சமேத வேணுகோபால சாமி கோயிலில் ஏகாதசி விழா நடந்தது. இதையொட்டி பக்தர்கள் துளசி, ரோஜா, மல்லிகை உள்ளிட்ட பல்வேறு மாலைகளை சாமிக்கு சாத்துபடி செய்தனர். முன்னதாக சிறப்பு அலங்காரம், அபிஷேகங்கள், தீபாராதனைகள் நடந்தது. ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.