உடுமலை வரதராஜ பெருமாள் கோவில் கும்பாபிேஷக விழா
ADDED :2699 days ago
உடுமலை: உடுமலை பள்ளபாளையத்தில், வரதராஜ பெருமாள் கோவில் கும்பாபிேஷக விழா வரும் 19ம் தேதி துவங்குகிறது. கிராமத்தில், கடந்த 2006ம் ஆண்டில், ஸ்ரீதேவி, பூதேவி சமேத வரதராஜ பெருமாள் கோவில் கட்டப்பட்டு, கும்பாபிேஷகம் நடத்தப்பட்டது. தற்போது கோவிலில், புனரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு, கும்பாபிேஷக விழா வரும் 19ம் தேதி மாலை 5:00 மணிக்கு மேல் துவங்குகிறது. அன்று, விஷ்வக் ஸனே ஆராதனம், அஷ்டபந்தன மருந்து சாத்துதல் உட்பட பூஜைகள் நடக்கிறது. வரும் 20ம் தேதி காலை, 5:00 மணிக்கு மேல், திவ்யப்ரபந்த சேவாகாலம், யாகசாலை ஹோ மங்கள், கோபுரம் மற்றும் மூலமூர்த்தி கும்பாபிேஷகம் நடக்கிறது. தொடர்ந்து பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்படுகிறது. இதற்கான ஏற்பாடுகளை, விழாக்குழுவினர் செய்து வருகின்றனர்.