உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / இந்து - முஸ்லிம் கொண்டாடும் சமத்துவ மாட்டுப் பொங்கல்!

இந்து - முஸ்லிம் கொண்டாடும் சமத்துவ மாட்டுப் பொங்கல்!

மேலூர்: முஸ்லிம் மக்கள் கொண்டு வரும் ஆடையை, இந்து அம்பலகாரர் பெற்றுக் கொள்ள, தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த பூஜாரி, அதை அம்மனுக்கு சாத்தி, மாடுகளை தொழுவில் இருந்து அவிழ்த்து விடும் சமத்துவ பொங்கல், மதுரை மாவட்டம், மேலூர் அருகே நடந்தது. மதுரை, மேலூர் அருகே தும்பைப்பட்டி, முன்னாள் அமைச்சர், கக்கன் பிறந்த ஊர். இவ்வூர் வீரகாளியம்மன் கோவிலில் ஆண்டு தோறும் மாட்டுப் பொங்கல், அன்று சமத்துவ பொங்கல் வைத்து, தொழுவத்தில் இருந்து மாட்டை அவிழ்ப்பது வழக்கம். இங்குள்ள முஸ்லிம் குடும்பம் ஒன்று, பரம்பரை பரம்பரையாக கொண்டு வந்து கொடுக்கும் பட்டாடை, அம்மனுக்கு இத் திருநாளில் அணிவிக்கப்படுகிறது. இந்த ஆண்டு, அக்குடும்பத்தைச் சேர்ந்த நாகூர் அனீபா தலையில் பட்டாடையும், பூமாலைகளும் சுமந்து, தாரை, தப்பட்டை முழங்க வீரகாளியம்மன் கோவில் மந்தைக்கு வந்தார். அவரை வரவேற்று, பதினெட்டுப்பட்டியைச் சேர்ந்த ஏழு அம்பலகாரர்கள் ஆடையை பெற்றுக் கொண்டனர். கோவில் பூஜாரியான தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்தவர், அப்பட்டாடையை அம்மனுக்கு சாத்தி அபிஷேகங்கள் செய்தார். பின்னர் அவரே, கோவில் மாட்டை முறைப்படி அவிழ்த்து விட்டு, மஞ்சுவிரட்டை துவக்கி வைத்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !