ராமநாதீஸ்வரர் கோவிலில் திருவூடல் விழா!
ADDED :5049 days ago
கண்டாச்சிபுரம் : கண்டாச்சிபுரம் ராமநாதீஸ்வரர் கோவிலில் திருவூடல் விழா நடந்தது. கண்டாச்சிபுரம் ராமநாதீஸ்வரர் கோவிலில் மாட்டுப் பொங்கலை முன்னிட்டு திருவூடல் விழா நடந்தது. காலை 4 மணிக்கு நந்திதேவருக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகளும், அலங்காரமும் செய்விக்கப்பட்டது. பின் உற்சவமூர்த்திகளான ராமநாதீஸ்வரருக்கும், ஞானாம்பிகை அம்மனுக்கும் சிறப்பு அலங்காரத்துடன் தீபாராதனை நடந்தது. செல்வம் தலைமையில் நாதஸ் வர வித்வான்களும், தவில் கலைஞர்களும் இசை நிகழ்ச்சி நடந்தது. விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சனம் செய்தனர்.