மூன்றெழுத்தில் மூச்சிருக்கும்
ADDED :2711 days ago
‘அவதரித்தல்’ என்பதற்கு ‘இறங்குதல்’ என்பது பொருள். வைகுண்டத்தில் இருக்கும் மகாவிஷ்ணு, பூமிக்கு இறங்கி வருவதை அவதாரம் என்பர். விண்ணுலகில் இருந்தே தீயவரை அழிக்க முடிந்தாலும், நல்லவரைக் காக்கும் செயலை நேரடியாகச் செய்ய விஷ்ணு விரும்புகிறார். நல்லவரைக் காத்தல், தீயவரை அழித்தல், தர்மத்தை நிலைநாட்டல் ஆகிய ‘கடமைகளை’ நிறைவேற்றுவதே விஷ்ணுவின் அவதார நோக்கம்.