உணவு ஜீரணமாக மந்திரம் போடுங்க!
ADDED :2837 days ago
சாப்பிடும் முன் கோவிந்தா...கோவிந்தா என ஏழுமுறை சொல்ல வேண்டும் என்பது விதி. சாப்பிட்ட பின் சிலருக்கு வயிறு மந்தமாக இருக்கும். செரிமானக் கோளாறு ஏற்படும்.இப்படிப்பட்டவர்கள், அகத்தியர், அக்னி, பாடபாக்னி ஆகியோர் நான் சாப்பிட்ட உணவை ஜீரணிக்கும்படி செய்யட்டும். நான் சாப்பிட்ட உணவு நன்றாக ஜீரணமாகி நன்மை தரட்டும். இந்த உணவால் உடலில் நோய் வராமல் இருக்கட்டும், என்று சொல்லி விட்டு, தொப்புளிலும், வயிற்றைச் சுற்றிலும்சிறிது தண்ணீரைத் தடவிக்கொண்டால்போதும். உணவு ஜீரணமாகும். குழந்தைகளுக்கும் இதைச் சொல்லித் தரலாம்.