சந்திரசேகரர் சிவாலாயத்தில் திருக்கல்யாண வைபவம் விழா
ADDED :2688 days ago
அந்தியூர்: அந்தியூர், அத்தாணி, திருவள்ளுவர் நகரில், ஆனந்தவல்லி உடனமர் சந்திரசேகரர் சிவாலாயத்தில் ஆனித்திருமஞ்சனம், திருக்கல்யாண வைபவம் பெருவிழா நேற்று நடந்தது. இதையொட்டி, காலை, 7:15 மணிக்கு விநாயகர் பூஜையும், 108 சங்காபிஷேக பூஜையை தொடர்ந்து, திருக்கல்யாண வைபவம் நடைபெற்றது. மாலை சிவகாமி அம்மை, நடராஜப் பெருமாள் திருவீதி உலா நடைபெற்றது. அத்தாணி முக்கியமான வீதிகளில், சாமி அலங்கரிக்கபட்டு, வீதி உலா சென்றது.