சூரிய பகவானை எந்த மலரால் எப்படி வழிபட வேண்டும்?
ADDED :2837 days ago
‘ஜபாகு ஸும சங்காசம்காஷ்ய பேயம் மகாத்யுதிம்தமோரிம் சர்வ பாபக்னம்பிரண தோஸ்மி திவாகரம்’ என்னும் ஸ்லோகத்தை 12 முறை சொல்லி வணங்குங்கள். ‘செம்பருத்தி பூவின் நிறம் கொண்டவரே! காஷ்யபரின் பிள்ளையே! இருளை ஒழிப்பவரே! பாவம் போக்குபவரே! திவாகரனே! உம்மை வணங்குகிறேன்” என்பது பொருள். சூரியனுக்கு தாமரை பூவால் அலங்கரித்து பொங்கல் படைக் கலாம். ஆவணி ஞாயிறு விரதம்இருக்க ஆரோக்கியம் மேம்படும்.