உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சொக்கநாத பெருமான் கோவிலில் பிரதோஷ விழா

சொக்கநாத பெருமான் கோவிலில் பிரதோஷ விழா

செஞ்சி : செத்தவரை மோன சித்தர் ஆசிரமத்தில் உள்ள சொக்கநாத பெருமான் கோவிலில்பிரதோஷ வழிபாடு நடந்தது. செஞ்சி தாலுகா, செத்தவரை ஸ்ரீசிவஜோதி மோனசித்தர் ஆசிரமத்தில் உள்ள மீனாட்சி அம்மன் சமேத சொக்கநாதர் கோவிலில் நேற்று முன்தினம் மாலை, பிரதோஷ வழிபாடு நடந்தது. இதை முன்னிட்டு, பிரதோஷ நாயகர் நந்தி பெருமானுக்கும், சொக்கநாதர், மீனாட்சியம்மன் மற்றும் உற்சவ மூர்த்திகளுக்கும் ஸ்ரீசிவ ஜோதி மோன சித்தர் தலைமையில் மகா அபிஷேகம் செய்தனர். சிவ வாத்தியங்கள் முழுங்க நந்தியம் பெருமானுக்கு சிறப்பு பூஜையும், மகா தீபாராதனையும் நடந்தது. தொடர்ந்து நந்தி வாகனத்தில் மீனாட்சி, சொக்கநாதர் கோவில் உலா நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் மற்றும் விழா குழுவினர் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !