வெள்ளி கவசத்தில் விநாயகர் அருள்பாலிப்பு
ADDED :2961 days ago
வீரபாண்டி: சங்கடஹர சதுர்த்தியை முன்னிட்டு, அரியானூர், மகா கணபதி கோவிலில், நேற்று காலை, சிறப்பு அபி ?ஷகம் நடந்தது. மூலவர், வெள்ளி கவசத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். மாலை, சிறப்பு பூஜையில், திரளான பக்தர்கள், சுவாமியை தரிசித்தனர். அதேபோல், ஆட்டையாம்பட்டி கை.புதூர் ராஜகணபதி கோவிலில், சிறப்பு பூஜை நடந்தது.