காவேரியம்மன் கோயிலில் முளைப்பாரி ஊர்வலம்
ADDED :2962 days ago
மேலுார், மேலுார் அருகே நாவினிபட்டி காவேரியம்மன் கோயில் திருவிழாவை முன்னிட்டுமுளைப்பாரி ஊர்வலம் நடந்தது. வடக்கு, தெற்குநாவினிப்பட்டி உள்ளிட்ட சுற்றியுள்ள கிராமத்தினர் முளைப்பாரி எடுத்து நேர்த்திக் கடன் செலுத்தினர். ஊர்வலம் மந்தை, மெயின்ரோடு வழியாக கோயிலுக்கு கொண்டு செல்லப்பட்டு முளைப்பாரிகரைக்கப்பட்டது.