திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் தீர்த்தவாரி
ADDED :2631 days ago
திருவண்ணாமலை: திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில், சந்திர கிரகணத்தையொட்டி, பிரம்ம தீர்த்த குளத்தில், தீர்த்தவாரி நடந்தது. சந்திர கிரகணம், நேற்று முன்தினம் இரவு, 11:54 மணி முதல், நேற்று அதிகாலை, 3:49 மணி வரை நடந்தது. இதையொட்டி, சந்திரகிரகணம் முடிந்தவுடன், அதிகாலை, 4:00 மணிக்கு அரு� �ாசலேஸ்வரர் கோவில், பிரம்ம தீர்த்த குளத்தில் தோஷ நிவர்த்தி அஸ்திரதேவர் தீர்த்தவாரி நடந்தது. இதைமுன்னிட்டு, சூல வடிவில் அருணாசலேஸ்வரர் குளத்தில் இறங்கி நீராடினார். பின், குளக்கரையில், அவருக்கு சிறப்பு அபிேஷகம் மற்றும் சிறப்பு பூஜை நடந்தது. இதில், ஏராளமானோர் நீராடி வழிபட்டனர்.