உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சிங்கம்புணரியில் ஆடிபெருக்கு அன்னதானம்

சிங்கம்புணரியில் ஆடிபெருக்கு அன்னதானம்

சிங்கம்புணரி: சிங்கம்புணரியில் ஆடிப்பெருக்கை முன்னிட்டு கோயில்களில் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இங்குள்ள சித்தர் முத்துவடுக நாதர் கோயிலில் வணிகர்நலச் சங்கம், அன்னதான குழு சார்பாக அன்ன தான விழா நடந்தது. இதையொட்டி காலை 9:00 மணிக்கு சித்தருக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் செய்யப்பட்டு பூஜைகள் நடந்தது. குவித்து வைக்கப்பட்ட சாதத்தில் லிங்கம் பிரதிஷ்டை செய்யப்பட்டு வழிபாடு நடத்தப்பட்டது. அந்த சாதத்தைக் கொண்டு பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. வேட்டையன் பட்டி காமாட்சி பரமேஸ்வரி அம்மன் கோயிலில் ஆடிப்பெருக்கையொட்டி சிறப்பு பூஜை செய்யப்பட்டு அன்னதான விழா நடந்தது. சிறப்பு அலங்காரத்தில் அம்மன் காட்சியளித்தார். பாரதி நகர் நொண்டி கருப்பர் கோயிலிலும் நடைபெற்ற விழாவில் கருப்பருக்கு சிறப்பு வழிபாடு நடத்தப்பட்டு அன்னதானம் வழங்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !