உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / வீரபத்திரசுவாமி கோவிலில் தலையில் தேங்காய் உடைத்து நேர்த்திக்கடன்

வீரபத்திரசுவாமி கோவிலில் தலையில் தேங்காய் உடைத்து நேர்த்திக்கடன்

பொம்மிடி: பொம்மிடி அருகே, வீரபத்திரசுவாமி கோவிலில் நடந்த விழாவில், பக்தர்கள் தலையில் தேங்காய் உடைத்து, நேர்த்திக் கடன் செலுத்தினர். தர்மபுரி மாவட்டம், பொம்மிடி அடுத்த, பையர்நத்தத்தில் வசிக்கும், குருமன்ஸ் இன மக்கள் வீரபத்திரசுவாமியை தங்கள் குலதெய்வமாக வழிபடுகின்றனர்.


ஒவ்வொரு ஆண்டும், ஆடிப்பெருக்கன்று, அருகேவுள்ள நீர்நிலைகளுக்கு, வீரபத்திரசுவாமியை எடுத்து சென்று சிறப்பு பூஜை செய்து, தலையில் தேங்காய் உடைத்து பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்துவது வழக்கம். காலை, 10:00 மணிக்கு கோவிலில் இருந்து, வீரபத்திரசுவாமி மற்றும் சித்தப்பன், ஜடையப்பன், பாவாடராயன், தொட்டிலிபீரம்மாள், பட்டக்காரன், குப்பதப்பன் உள்ளிட்ட சுவாமி சிலைகள், அப்பகுதியில் உள்ள பெரிய ஏரிக்கு ஊர்வலமாக மக்கள் எடுத்து வந்தனர். அங்கு, சிலைகளுக்கு சிறப்பு அலங்காரம் மற்றும் அபி ேஷகம் செய்யப்பட்டு, சக்தி அழைத்தல் நிகழ்ச்சி நடந்தது. இதையடுத்து, பக்தர்கள் தங்கள் தலையில் தேங்காய் உடைத்து, நேர்த்திக்கடன் நிறைவேற்றினர். விழாவில், பக்தர்களுக்கு சாட்டையடி வழங்கப்பட்டது. சுற்று வட்டாரப் பகுதிகளை சேர்ந்த, ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !