நாகம்மன் கோவில் செடல் கொடியேற்றத்துடன் துவக்கம்
ADDED :2662 days ago
கடலுார்: கடலுார் பஸ் நிலையத்தில் நாகம்மன் கோவில் செடல் பெருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியது. கடலுார் பஸ் நிலையத்தில் உள்ள நாகம்மன் கோவிலில் 10 நாட்கள்a உற்சவமான செடல் பெருவிழா வரும் 17ம் தேதி நடக்கிறது. இதனையொட்டி நேற்று காலை கொடியேற்றம் நடந்தது. முன்னதாக, அம்மனுக்கு சிறப்பு தீபாராதனை நடந்தது. மூலவர் அம்மன் சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்தார். பக்தர்கள் திரளாக பங்கேற்று தரிசனம் செய்தனர். தினமும் தீபாராதனையும், அம்மன் வீதியுலாவும் நடக்கிறது. 9ம் நாள் உற்சவமான செடல் பெருவிழா வரும் 17ம் தேதி நடக்கிறது. 18ம் தேதி மஞ்சள் நீராட்டு உற்சவமும், 24ம் தேதி உதிரவாய் நிகழ்ச்சியும் நடக்கிறது.