உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ஆண்டவன் முத்திரை

ஆண்டவன் முத்திரை

இங்கிலாந்தில் பணக்காரர் ஒருவரின் மனைவி காலமாகி விட்டார். குழந்தைகளும் அவர்களுக்கு இல்லை. கோடிக்கணக்கான சொத்துக்கள்... ஆனாலும், யாருக்கும் எதையும் கொடுக்க முன்வரவில்லை. ஓரிரு ஆண்டில் அவரும் இறந்துபோனார். அக்கம் பக்கத்திலுள்ளவர்கள் அவரது வீட்டிற்குள் சென்று அகப்பட்டதை சுருட்டிக் கொண்டனர். இதையறிந்த தூரத்து உறவினர்கள் அரசாங்கத்திடம் தகவல் தெரிவித்தனர். உடனடியாக மகாராணியார் உத்தரவுப்படி சேவகர்கள் பணக்காரரின் வீட்டிற்கு சீல் வைத்தனர். இதைப்பார்த்த மக்களுக்கு பயம் உண்டானது.  ஒருவேளை அரசு  விசாரணைக்கு வந்தால் மாட்டிக்கொள்வோமே என தாங்கள் எடுத்துச்சென்ற பொருட்களை இரவோடு இரவாக அந்த வீட்டின் வராண்டாவில்  விட்டு சென்றனர். இங்கிலாந்தின் ராஜமுத்திரைக்கு மக்களிடம் அந்தளவுக்கு பயம், பாதுகாப்பு இருந்தது. சொத்தை அரசு கையகப்படுத்தியது போல நமது பாவங்களை அறிக்கையிட்டு மன்னிப்பு கேட்டால் ஆண்டவரின் பாதுகாப்பான முத்திரை நமக்கு கிடைத்துவிடும். “இவன் ஆண்டவருக்கு உரியவன். இவனைத் தொடுவதற்கு யாருக்கும் அதிகாரம் இல்லை” என்பதே ஆண்டவர் நமக்கு முத்திரையிடும் நோக்கம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !