திருநங்கையர் நடத்திய கும்பாபிஷேகம்
ADDED :2649 days ago
பூங்கா நகர்: திருநங்கையர் நடத்திய, கோவில் கும்பாபிஷேக விழாவில், பக்தர்கள் திரளாக பங்கேற்றனர். சென்னை, பூங்கா நகர், பெத்து நாயக்கன் தெருவில், பிரசித்தி ற்ற அங்காள பரமேஸ்வரி கோவில் உள்ளது. 19 ஆண்டுகளாக உள்ள இக்கோவிலுக்கு, நேற்று காலை, சிறப்பு பூஜைகளுடன், கும்பாபிஷேக விழா நடந்தது.கோவில் பூசாரி, திருநங்கை கவிபாரதி ஏற்பாட்டில் நடந்த விழாவில், திருநங்கையர் மற்றும்பக்தர்கள் திரளாகபங்கேற்றனர்.