உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பழநியில் விடுமுறை தினத்தில் ‘வின்ச்-ல்’ 2 மணி நேரம் காத்திருப்பு

பழநியில் விடுமுறை தினத்தில் ‘வின்ச்-ல்’ 2 மணி நேரம் காத்திருப்பு

பழநி: ஞாயிறு விடுமுறை தினத்தில், பழநி முருகன் கோயிலுக்கு வந்தபக்தர்கள் ‘ரோப்கார்’ நிறுத்தம் காரணமாக, ‘வின்ச்’ ஸ்டேசனில் இரண்டு மணிநேரத்திற்கு மேலாக காத்திருந்தனர். பழநி முருகன் மலைக்கோயிலுக்கு வழக்கமாக சனி, ஞாயிறு தினங்களில் வெளியூர் சுற்றுலா பயணிகள், பக்தர்கள் அதிகமாக வருகின்றனர். நேற்று ஞாயிறு பவுர்ணமியை முன்னிட்டு அதிகாலை முதல் குவிந்த பக்தர்கள், ‘ரோப்கார்’ நிறுத்தம் காரணமாக, வின்ச் மூலம் மலைக்குசெல்வதற்கு இரண்டு மணிநேரத்திற்கு மேலாக வரிசையில் காத்திருந்தனர். மலைக்கோயில் பொதுதரிசனம் வழியில் ஒருமணிநேரம் வரை காத்திருந்து முருகரை தரிசனம் செய்தனர். பால்குடங்கள், காவடிகள் எடுத்து கிரிவலம்வந்தனர். இதேப்போல இரவு தங்கரதப்புறப்பாட்டில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !