செடி, கொடி, மரம் என தாவரங்கள் ஆன்மிக வாழ்வுக்கு அவசியமானதா?
ADDED :2601 days ago
தாவரங்கள் செழித்து உலகம் வளம் பெற வேண்டும் என வேதம் கடவுளை வேண்டுகிறது. கும்பாபிஷேகம், திருமணம் போன்ற நிகழ்ச்சிகளில் முளைப்பாரி வைப்பதன் நோக்கம் இதுவே. தாவரம் உணவாக பயன்படுவதோடு நோய் தீர்க்கும் மூலிகையாகவும், யாகத்தில் இடும் திரவியமாகவும் உள்ளன. வில்வம், துளசி, வேம்பு, அருகம்புல், தாமரை என மரம், செடி, கொடி அனைத்தும் ஆன்மிகத்துடன் நெருங்கிய தொடர்பு கொண்டவையே.