ராகவேந்திரர் ஆராதனை: ஏராளமானோர் பங்கேற்பு
ADDED :2594 days ago
கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி புதுப்பேட்டை செந்தில்நகரில் உள்ள ஸ்ரீராகவேந்திரர் கோவிலில், 347ம் ஆண்டு ஆராதனை மஹோத்ஸவ விழா, கடந்த, 27ல் துவங்கியது. தினமும் கோவிலில், ராகவேந்திரர் சுப்ரபாதம், நிர்மால்ய அபி?ஷகம், வேதபாராயணம், பஞ்சாம்ருத அபி ?ஷகம், ஹஸ்தோதக சேவா நடந்தது. நேற்று காலை, மஹா மங்களார்த்தி, அலங்காரம், தீர்த்தப்பிரசாதம், உத்ஸவம், தீபாராதனை, ஸ்வஸ்தி நடந்தது. இதில், ஏராளமான பக்தர்கள் பங்கேற்று, சுவாமி தரிசனம் செய்தனர்.