உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ப.வேலூர் விநாயகர் சதுர்த்தி முன்னேற்பாடு தீவிரம்

ப.வேலூர் விநாயகர் சதுர்த்தி முன்னேற்பாடு தீவிரம்

ப.வேலூர்: விநாயகர் சதுர்த்தி விழா, வரும், 13ல் நாடு முழுவதும் கொண்டாடப்பட உள்ளது. நாமக்கல் மாவட்டத்தில், பிரசித்தி பெற்ற ஸ்தலமாக கருதப்படும், ப.வேலூர் பஞ்சமுக ஹேரம்ப மஹாகணபதி கோவிலில், ஆண்டுதோறும் சதுர்த்தி விழா சிறப்பாக கொண்டாடப்படுவது வழக்கம். உள்மாவட்டம் மட்டுமின்றி அருகிலுள்ள கரூர், ஈரோடு மாவட்டங்களிலிருந்தும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள், கோவிலில் இருந்து, பஸ் ஸ்டாண்ட் வரை நீண்ட வரிசையில் காத்திருந்து தரிசனம் செய்வர். அதையொட்டி கோவில் பிரகாரங்கள் தூய்மைப்படுத்தப் படுகின்றன. இந்த வாரங்களில் வெயிலின் தாக்கம் கடுமையாக உள்ளதால், பிரம்மாண்ட பந்தல் அமைக்கும் பணி நடக்கிறது. ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர், பக்தர்கள் செய்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !