கரூர் தான்தோன்றிமலை கல்யாண வெங்கடரமணசுவாமி திருக்கல்யாணம்
ADDED :2573 days ago
கரூர்: தான்தோன்றிமலை கல்யாண வெங்கடரமண சுவாமி கோவிலில், நேற்று (செப்., 19ல்) மாலை, சுவாமிக்கு திருக்கல்யாண உற்சவம் நடந்தது.
கரூர் அருகே, தான்தோன்றிமலையில், பிரசித்தி பெற்ற கல்யாண வெங்கடரமண சுவாமி கோவில் உள்ளது. இங்கு ஆண்டுதோறும் புரட்டாசி மாதத்தில், தேரோட்ட விழா சிறப்பாக
நடக்கும். நடப்பாண்டு கடந்த, 13ல், கொடியேற்றத்துடன் விழா
துவங்கியது. 15ல், வெள்ளி கருட சேவை நடந்தது. நேற்று (செப்.,19ல்) மாலை, 5:30 மணிக்கு, வெங்கடரமண சுவாமி, ஸ்ரீதேவி பூதேவி திருக்கல்யாண உற்சவம் விமரிசையாக நடந்தது. அதில், நூற்றுக்கும் மேற்பட்ட பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர். நாளை(செப்., 21ல்) காலை, 8:30 மணிக்கு தேரோட்டம் நடக்கிறது.