உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கண்டாச்சிபுரம் சிறுவாலை பாலாம்பிகை உடனுறை பாலேஸ்வரர் கோவிலில் உச்சிகால பூஜை.

கண்டாச்சிபுரம் சிறுவாலை பாலாம்பிகை உடனுறை பாலேஸ்வரர் கோவிலில் உச்சிகால பூஜை.

கண்டாச்சிபுரம்: சிறுவாலை பாலாம்பிகை உடனுறை பாலேஸ்வரர் கோவிலில் சோமவார உச்சிகால பூஜையில் ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.

கெடார் அடுத்த சிறுவாலை பாலாம்பிகை உடனுறை பாலேஸ்வரர் கோவிலில், நேற்று (செப்., 24ல்) காலை சோமவார பூஜைகள் நடைபெற்றன. காலை 11:00 மணிக்கு 1008 லலிதா சகஸ்ரநாம பூஜையும், அதனைத்தொடர்ந்து உச்சிகால பூஜையில், பக்தர்கள் பங்கு பெற்ற வாழைப்பூ கலச வழிபாடு மற்றும் மூலவர் பாலேஸ்வரர் மற்றும் பாலாம்பிகை அம்மனுக்கு சிறப்பு தீபாராதனை நடைபெற்றன. இதில் ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !