முதுகுளத்தூர் ஆனைச்சேரியில் அய்யனார் கோவில் புரவி எடுப்பு விழா
ADDED :2882 days ago
முதுகுளத்தூர்: அருகே ஆனைச்சேரியில் அய்யனார் கோவில் புரவி எடுப்பு விழா நடந்தது. ஏராளமானோர் காப்புக் கட்டிருந்தனர். ஒயிலாட்டம், கும்மியடித்தல் நடந்தது. நேர்த்திக்கடன் செலுத்த மண்குதிரை, தவழும் பிள்ளை உருவங்களை ஊர்வலமாக பக்தர்கள் எடுத்து வந்தனர். இரவு நாடகம் நடந்தது. இதேபோல கே.ஆர்.பட்டினத்தில் அய்யனார் கோவில் புரவி எடுப்பு விழா நடந்தது.