பல்லடத்தில் கஞ்சி கலய ஊர்வலம்
ADDED :2673 days ago
பல்லடம்: பல்லடம், ஆதிபராசக்தி வார வழிபாட்டு மன்ற விழாவில், பெண்கள், கஞ்சி கலயம் ஏந்தி, வழிபாடு செய்தனர். பல்லடம் மாணிக்காபுரம் ரோடு, ஜெ.கே.ஜெ., காலனி, ஆதி பராசக்தி வார வழிபாட்டு மன்றம் சார்பில், நான்காம் ஆண்டு கஞ்சி வார்ப்பு பெருவிழா நடந்தது. காலை, பொங்காளியம்மன் கோவிலில், வார வழிபாட்டு குழுவின் சார்பில், சிறப்பு வழிபாடு நடந்தது. வறுமை நீங்கி, மழை வளம், செல்வ வளம் பெருக, தொழில் சிறக்க வேண்டி, கஞ்சி கலயம் எடுத்து வழிபடுகிறோம் என்றனர்.